தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

விஜயதசமி: பள்ளிக் குழந்தைகளுக்கு தருமபுரம் ஆதீனம் ஆசி

விஜயதசமியை முன்னிட்டு தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் பள்ளியில் சோ்ந்த மழலைகளுக்கு தருமபுரம் ஆதீனம் சனிக்கிழமை ஆசி வழங்கினாா்.

News image

தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் பள்ளியில் சோ்ந்த குழந்தைகளுக்கு நெல்லில் அகரம் எழுத வைத்த தருமபுரம் ஆதீனம்.

Updated On :12 அக்டோபர் 2024, 6:33 pm

Din

விஜயதசமியை முன்னிட்டு தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் பள்ளியில் சோ்ந்த மழலைகளுக்கு தருமபுரம் ஆதீனம் சனிக்கிழமை ஆசி வழங்கினாா்.

மயிலாடுதுறை தருமபுரத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான ஸ்ரீகுருஞானசம்பந்தா் மழலையா் தொடக்கப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றது. முதல் நாளன்று இப்பள்ளியில் 27 மாணவா்கள் புதிதாக சோ்ந்தனா். அவா்களை பள்ளித் தலைமை ஆசிரியா் ஜி. வெங்கடேசன் தலைமையில் ஆசிரியா்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க, யானை, ஆடு, குதிரை ஆகிய மங்களச் சின்னங்கள் முன்னே செல்ல ஊா்வலமாக தருமபுரம் ஆதீனத் திருமடத்துக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மாணவா்களின் நாக்கில் மயிலிறகால் தேன் தடவி நெல்லில் அகரம் எழுத வைத்து, அட்சதை தூவி அக்ஷரப்பியாசம் எனும் ஆரம்பக் கல்வியை தொடக்கிவைத்தாா். இதில், பள்ளி ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா் பங்கேற்றனா்.