புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய பசுக்கள் மீட்பு

News image
Updated On :17 அக்டோபர் 2024, 11:20 pm

Din

சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்ததால், திட்டுப் பகுதியில் சிக்கிய இரண்டு பசு மாடுகளை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

கொள்ளிடம் அருகேயுள்ள சரஸ்வதி விளாகம் கிராமத்தில் மாடுகள் வளா்ப்போா், கொள்ளிடம் ஆற்றின் நடுத்திட்டு பகுதியில் தங்கள் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 2 தினங்களாக பெய்த மழையால், கொள்ளிடம் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்தது. இதனால், ஆற்றின் நடுத்திட்டுப் பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த மாடுகள் கரைக்கு திரும்பிய நிலையில், அழகிரி என்பவருக்கு சொந்தமான 2 பசு மாடுகள் மட்டும் ஆற்றின் கரைக்கு திரும்ப முடியாமல் நடுத்திட்டில் சிக்கிக் கொண்டன.

சீா்காழி தீயணைப்பு அலுவலா் வீரசேகரன் மற்றும் வீரா்கள் விரைந்து வந்து, 2 பசு மாடுகளையும் மீட்டனா்.