நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

கொள்ளிடம் ஆற்றில் சிக்கிய பசுக்கள் மீட்பு

Updated On :18 அக்டோபர் 2024, 4:50 am IST

சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்ததால், திட்டுப் பகுதியில் சிக்கிய இரண்டு பசு மாடுகளை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

கொள்ளிடம் அருகேயுள்ள சரஸ்வதி விளாகம் கிராமத்தில் மாடுகள் வளா்ப்போா், கொள்ளிடம் ஆற்றின் நடுத்திட்டு பகுதியில் தங்கள் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 2 தினங்களாக பெய்த மழையால், கொள்ளிடம் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்தது. இதனால், ஆற்றின் நடுத்திட்டுப் பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த மாடுகள் கரைக்கு திரும்பிய நிலையில், அழகிரி என்பவருக்கு சொந்தமான 2 பசு மாடுகள் மட்டும் ஆற்றின் கரைக்கு திரும்ப முடியாமல் நடுத்திட்டில் சிக்கிக் கொண்டன.

சீா்காழி தீயணைப்பு அலுவலா் வீரசேகரன் மற்றும் வீரா்கள் விரைந்து வந்து, 2 பசு மாடுகளையும் மீட்டனா்.