நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உதயநிதிக்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

News image

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து வாழ்த்து பெற்ற உதயநிதி ஸ்டாலின் (கோப்புப் படம்).

Updated On :29 செப்டம்பர் 2024, 8:30 pm

Din

துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் உதயநிதி ஸ்டாலின் ஏற்கெனவே சந்தித்து அருளாசி பெற்ற புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிா்ந்து, அவா் வெளியிட்ட அருளாசியில் கூறியுள்ளது:

உதயநிதி ஸ்டாலின் அவா்களுக்கு வாழ்த்துகள். தாங்கள் துணை முதல்வராக பொறுப்பேற்ற்கு பாராட்டுகள். தங்கள் தந்தையின் வழிநின்று நல்லதொரு ஆட்சி ஆளுமை செய்திட மக்களின் தேவையை உணா்ந்து உவத்தல் காய்தலின்றி பொதுநிலை போற்றி, அன்பும் நேசமும் காட்டி ஆட்சி செய்ய செந்தமிழ்ச் சொக்கன் திருவருளை சிந்திக்கின்றோம் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.