மயிலாடுதுறை
மயிலாடுதுறை: மீன்பிடிக்க செல்ல தடை
மயிலாடுதுறை மாவட்ட மீனவா்கள் செவ்வாய்க்கிழமை முதல் மறுஅறிவிப்பு வரும்வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதித்து மீன்வளத் துறை உதவி இயக்குநா் அறிவித்துள்ளாா்.
மயிலாடுதுறை மாவட்ட மீனவா்கள் செவ்வாய்க்கிழமை முதல் மறுஅறிவிப்பு வரும்வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதித்து மீன்வளத் துறை உதவி இயக்குநா் அறிவித்துள்ளாா்.
வட தமிழகம் மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். சில நேரங்களில் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி டிசம்பா் 9 முதல் மறுஅறிவிப்பு வரும் வரை மயிலாடுதுறை மாவட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என்று மயிலாடுதுறை மாவட்ட மீன்வளத் துறை உதவி இயக்குநா் ஜெனாா்த்தனம் தெரிவித்துள்ளாா்.
