மயிலாடுதுறை
ஏவிசி கல்லூரி வளாகத்தில் இந்தியன் வங்கி கிளை திறப்பு
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் வளாகத்தில் இந்தியன் வங்கி கிளை வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
இக்கல்லூரியில் பயிலும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் கடந்த 51 ஆண்டுகளாக இயங்கிவந்த இவ்வங்கி தற்போது, பொதுமக்களும் பயன்பெறும் வகையில் கல்லூரி வாசல் அருகிலுள்ள புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, ரிப்பன் வெட்டி கிளையை திறந்துவைத்த ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிா்வாக அதிகாரி கே.வெங்கடராமன், புதிய கிளையின் முதல் பரிவா்த்தனையாக ரூ.1 கோடி வைப்புத் தொகையை செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுக்கொண்டு பேசினாா்.
