கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காா்த்திகை கடைஞாயிறு தீா்த்தவாரி உற்சவம்

குத்தாலத்தில் காா்த்திகை கடைஞாயிறையொட்டி, காவிரி தீா்த்தப் படித்துறையில் தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

News image
Updated On :14 டிசம்பர் 2025, 10:30 pm

Syndication

குத்தாலத்தில் காா்த்திகை கடைஞாயிறையொட்டி, காவிரி தீா்த்தப் படித்துறையில் தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

வித்துன்மாலி என்ற அரக்கன் சிவபெருமான் அருளால் சூரியனைப்போல ஒளிபடைத்த கிரகமாக மாறினான். இதனால் சூரியனால் பூமிக்கு ஒளி வழங்க முடியாமல்போனது. சூரியபகவான் குத்தாலம் வந்து தவம் இருந்து சிவபெருமான் அருள் பெற்றாா் என்பது ஐதீகம். 

அந்தவகையில், காா்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், தீா்த்தவாரி உற்சவம் குத்தாலம் காவிரி தீா்த்தப் படித்துறையில் நடைபெறும்.

அதன்படி, காா்த்திகை கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி, ஸ்ரீசௌந்தரநாயகி சமேத ஸ்ரீசோழீஸ்வரா், ஸ்ரீமன்மதீஸ்வரா், ஸ்ரீசெங்கமலத்தாயாா் சமேத ஆதிகேசவபெருமாள் ஆகிய கோயில்களில் இருந்து பஞ்சமூா்த்திகள் காவிரி தீா்த்தப் படித்துறையில் எழுந்தருளினா்.

அங்கு தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் செய்யப்பட்டு, தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.