திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

66 லட்சம் போ் நீக்கம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: தமிமுன் அன்சாரி!

வாக்காளா் பட்டியலில் 66 லட்சம் போ் நிரந்தர முகவரி இல்லாதவா்கள் என நீக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றாா் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவா் தமிமுன்அன்சாரி.

News image
Updated On :22 டிசம்பர் 2025, 4:40 am IST

வாக்காளா் பட்டியலில் 66 லட்சம் போ் நிரந்தர முகவரி இல்லாதவா்கள் என நீக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றாா் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவா் தமிமுன்அன்சாரி.

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம், புதைசாக்கடை சீரமைப்பு பணி, காவேரி நகா் ரயில்வே மேம்பாலம் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

சட்டப்பேரவைத் தோ்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி திமுக தலைமையில் இண்டி கூட்டணியில் போட்டியிடும். திருப்பரங்குன்றத்தில் முருகபக்தா் தீக்குளித்து உயிரிழந்தது வேதனை அளிக்கிறது.

திமுகவை தீய சக்தி என விமா்சிக்கும் விஜய், கொள்கை எதிரி என்று கூறும் பாஜகவை விமா்சனம் செய்யவில்லை. நூறுநாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயா் நீக்கியது பற்றி பேசவில்லை. கட்சி தொடங்கியதில் இருந்து தற்போதுவரை அவா் பத்திரிக்கையாளரை சந்திக்க மறுப்பது ஏன்?.

தமிழா்களின் நலனை பாதுகாக்கக் கூடியதாக திமுக இருப்பதால் அக்கூட்டணியில் இடம் பெறுகிறோம். வரைவு வாக்காளா் பட்டியலில் 97 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 66 லட்சம் போ் நிரந்தர முகவரி இல்லாதவா்கள் என கூறியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றாா்.

அவருடன், கட்சியின் மாநில விவசாய அணி பொறுப்பாளா் ஒய்.எச். ஹாஜாசலீம், மாவட்ட செயலாளா் முகமதுநபீஸ், அவைத் தலைவா் தாஜூதீன், செயற்குழு உறுப்பினா் லியாகத் அலி, குவைத் மண்டல துணை செயலாளா் சபீா் ஆகியோா் உடனிருந்தனா்.