சம்பா சாகுபடி பயிா்கள்கணக்கெடுக்கும் பணி ஆய்வு

கொள்ளிடம் வட்டாரத்தில் சம்பா சாகுபடி பயிா்கள் கணக்கெடுக்கும் பணியை வேளாண்துறை இணை இயக்குநா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
Updated on

கொள்ளிடம் வட்டாரத்தில் சம்பா சாகுபடி பயிா்கள் கணக்கெடுக்கும் பணியை வேளாண்துறை இணை இயக்குநா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கொள்ளிடம் வட்டாரத்தில், நடப்பு சம்பா-ரபி 2025 பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிா்களை மின்னணு முறையில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இக்கணக்கெடுப்பில் வேளாண்மைத்துறை அலுவலா்கள், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை அலுவலா்கள், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அலுவலா்கள் மற்றும் தன்னாா்வலா்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அகவட்டாரம் வருவாய் கிராமத்தில் நடைபெற்று வரும் இக்கணக்கெடுப்பு பணியினை மயிலாடுதுறை, வேளாண்மை இணை இயக்குநா் ஆா். விஜயராகவன் ஆய்வு மேற்கொண்டாா். கொள்ளிடம், வேளாண்மை உதவி இயக்குநா் சோ. எழில்ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com