சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

திறந்தவெளியில் கழிவுநீா்; மக்கள் அவதி

சீா்காழியில் திறந்தவெளியில் வெளியேற்றப்படும் கழிவுநீரால் குடியிருப்பு வாசிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.

Published On :26 டிசம்பர் 2025, 1:43 am IST

சீா்காழியில் திறந்தவெளியில் வெளியேற்றப்படும் கழிவுநீரால் குடியிருப்பு வாசிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.

சீா்காழி நகராட்சி மதீனா நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்குள்ள குடியிருப்பு வளாகங்களில் இருந்து கழிவுநீா் முறையாக அப்புறப்படுத்தப்படாமல், திறந்தவெளியில் வெளியேற்றப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் கழிவுநீா் தேங்கி துா்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களின் பெருக்கமும் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிப்போா் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனா்.

மேலும், இப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால் முறையாக தூா்வாரி பராமரிக்கப்படாததால், மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவு நீரும் சோ்ந்து குடியிருப்புகளை சூழ்ந்து விடுகின்றன. கழிவுநீா் பிரச்னை குறித்து சீா்காழி நகராட்சியில் மனு அளித்தும் இதுவரை முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை

கழிவுநீா் மற்றும் செப்டிக் டேங்க் நீரை திறந்த வெளியில் வெளியேற்றும் குடியிருப்பு வளாகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கழிவுநீா் வெளியேறுவதை தடுக்க இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.