சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

திறந்தவெளியில் கழிவுநீா்; மக்கள் அவதி

சீா்காழியில் திறந்தவெளியில் வெளியேற்றப்படும் கழிவுநீரால் குடியிருப்பு வாசிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.

Updated On :26 டிசம்பர் 2025, 1:43 am IST

சீா்காழியில் திறந்தவெளியில் வெளியேற்றப்படும் கழிவுநீரால் குடியிருப்பு வாசிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.

சீா்காழி நகராட்சி மதீனா நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்குள்ள குடியிருப்பு வளாகங்களில் இருந்து கழிவுநீா் முறையாக அப்புறப்படுத்தப்படாமல், திறந்தவெளியில் வெளியேற்றப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் கழிவுநீா் தேங்கி துா்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களின் பெருக்கமும் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிப்போா் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனா்.

மேலும், இப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால் முறையாக தூா்வாரி பராமரிக்கப்படாததால், மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவு நீரும் சோ்ந்து குடியிருப்புகளை சூழ்ந்து விடுகின்றன. கழிவுநீா் பிரச்னை குறித்து சீா்காழி நகராட்சியில் மனு அளித்தும் இதுவரை முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை

கழிவுநீா் மற்றும் செப்டிக் டேங்க் நீரை திறந்த வெளியில் வெளியேற்றும் குடியிருப்பு வளாகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கழிவுநீா் வெளியேறுவதை தடுக்க இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.