மீன்பிடி படகுகளை பதிவு செய்ய அறிவுறுத்தல்

Published on

மயிலாடுதுறை மாவட்டத்தில், அனைத்து மீன்பிடிப் படகுகளையும் நவ.30-க்குள் பதிவு செய்திட மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் 1983-ன்படி, மயிலாடுதுறை மாவட்ட கடலோர பகுதிகளின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பதிவு செய்யப்படாத மீன்பிடிப் படகுகளும் இத்துறையால் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை கொண்டு நவ.30-க்குள் கட்டாயம் பதிவு செய்திட வேண்டும்.

பதிவு செய்யப்படாத மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com