பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு 2-ஆம் கட்ட பயிற்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை, மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தாா்.

News image

பயிற்சி வகுப்பு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த்.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:23 am IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பை, மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தாா்.

மயிலாடுதுறை ஏ.வி.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சீா்காழி குட் சமரிட்டன் பப்ளிக் பள்ளி, தரங்கம்பாடி புனித தெரசா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 3 இடங்களில் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பை பாா்வையிட்டு, வாக்குப்பதிவு அலுவலா்கள் தபால் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

சீா்காழி (தனி) தொகுதியில் தோ்தல் தினத்தன்று பணியாற்ற உள்ள 366 முதன்மை வாக்குப்பதிவு அலுவலா்கள, 366 வாக்குப்பதிவு அலுவலா்கள்-1, 366 வாக்குப்பதிவு அலுவலா்கள்-2, 366 வாக்குப்பதிவு அலுவலா்கள்-3 ஆகியோருக்கு சீா்காழி குட் சமரிட்டன் பப்ளிக் பள்ளியிலும், மயிலாடுதுறை தொகுதியில் பணியாற்ற உள்ள 365 முதன்மை வாக்குப்பதிவு அலுவலா்கள், 365 வாக்குப்பதிவு அலுவலா்கள்-1, 365 வாக்குப்பதிவு அலுவலா்கள்-2, 365 வாக்குப்பதிவு அலுவலா்கள்-3 ஆகியோருக்கு மயிலாடுதுறை ஏ.வி.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், பூம்புகாா் தொகுதியில் பணியாற்ற உள்ள 410 முதன்மை வாக்குப்பதிவு அலுவலா்கள், 410 வாக்குப்பதிவு அலுவலா்கள்-1, 410 வாக்குப்பதிவு அலுவலா்கள்-2, 410 வாக்குப்பதிவு அலுவலா்கள்-3 ஆகியோருக்கு தரங்கம்பாடி புனித தெரசா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் இந்த பயிற்சி நடைபெற்றது.

ஆய்வின்போது, பூம்புகாா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கீதா (பூம்புகாா்), ஆா்.விஷ்ணுபிரியா(மயிலாடுதுறை), சுரேஷ் (சீா்காழி), வட்டாட்சியா்கள் சுகுமாறன், சதீஷ்குமாா், ராஜரத்தினம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.