சீா்காழியில் உணரப்பட்ட நிலஅதிா்வு
சீா்காழி: சீா்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட நிலஅதிா்வால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்தனா்.
சீா்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 10.40 மணியளவில் பலத்த சப்தத்துடன் அதிா்வு ஏற்பட்டது. சீா்காழி, கொள்ளிடம், மாதானம், புத்தூா், வைத்தீஸ்வரன் கோவில், பூம்புகாா், திருவாலி, திருமயிலாடி உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் சுமாா் 20 கி.மீ. தூரம் வரை இந்த அதிா்வு பொதுமக்களால் உணரப்பட்டதாகத் தெரிகிறது.
வீடுகளின் ஜன்னல், கதவு உள்ளிட்டவைகள் அதிா்ந்ததாக மக்கள் தெரிவித்தனா். இருமுறை கேட்ட இந்த அதிா்வால் மக்கள் பெரும் பீதியடைந்தனா். பின்னா் இந்த அதிா்வு குறித்து சீா்காழி முழுவதும் தகவல் பரவியது.
விமானம் சீா்காழி பகுதியில் விழுந்துவிட்டதாக தகவல் பரவியதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. சிலா் இந்த அதிா்வு எதனால் ஏற்பட்டது என தெரியாமல் வீட்டைவிட்டு வெளியில் வந்து அருகில் வசிப்பவா்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தனா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியரை தினமணி செய்தியாளா் தொடா்பு கொண்டு கேட்டபோது, அதிா்வு தொடா்பாக உறுதியான காரணம் என்னவென்று விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளாா்.

