மயிலாடுதுறை
குறைதீா் கூட்டத்தில் 408 மனுக்கள்
மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 408 மனுக்கள் பெறப்பட்டன.
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 408 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி தலைமை வகித்து மனுக்களைப் பெற்றாா். பின்னா் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்கவும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரத்தை மனுதாரா்களுக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தினாா். மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ச. உமாகேஷ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
