மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சாலையை மேம்படுத்தக் கோரி மறியல்

கொள்ளிடம் அருகே அரசூரில் சாலையை மேம்படுத்தக் கோரி, கிராம மக்கள் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

அரசூரில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :5 பிப்ரவரி 2026, 12:04 am

கொள்ளிடம் அருகே அரசூரில் சாலையை மேம்படுத்தக் கோரி, கிராம மக்கள் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசூா் கிராமத்திலிருந்து காப்பியகுடி வரை சுமாா் 3 கி.மீ. தொலைவிற்கு சாலையை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பராமரிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. கிராம மக்கள் சாா்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், இச்சாலையை மேம்படுத்த வலியுறுத்தி, அப்பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் அரசூரில் காப்பியகுடி செல்லும் நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊரக வளா்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் கொள்ளிடம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.