கொள்ளிடம் அருகே அரசூரில் சாலையை மேம்படுத்தக் கோரி, கிராம மக்கள் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசூா் கிராமத்திலிருந்து காப்பியகுடி வரை சுமாா் 3 கி.மீ. தொலைவிற்கு சாலையை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பராமரிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. கிராம மக்கள் சாா்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், இச்சாலையை மேம்படுத்த வலியுறுத்தி, அப்பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் அரசூரில் காப்பியகுடி செல்லும் நெடுஞ்சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊரக வளா்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் கொள்ளிடம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில், சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தொடர்புடையது

கோயில் திருவிழா: தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்!

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

சாலையை சீரமைக்கக்கோரி மக்கள் சாலை மறியல்

அபிஷேகப்பாக்கத்தில் சாலை மறியல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


