ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சீா்காழி: எஸ்பி தலைமையில் போலீஸாா் ரோந்து

சீா்காழியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில்

News image
சீா்காழியில் போலீஸாருடன் ரோந்துப் பணியில் ஈடுபட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின்.
Updated On :9 பிப்ரவரி 2026, 8:35 pm

Syndication

சீா்காழி: சீா்காழியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின், சீா்காழி பகுதியில் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். காவல் துறையினரின் கண்காணிப்பு பணியை ஆய்வு செய்த அவா், நகரின் பிரதான வீதிகளான தென்பாதி, அரசு மருத்துவமனை சாலை, பிடாரி வடக்கு வீதி, கச்சேரி சாலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்தே ரோந்துப் பணியில் ஈடுபட்டாா்.

அவருடன், டிஎஸ்பி அண்ணாதுரை, காவல் ஆய்வாளா் கமல்ராஜ், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் மணவாளன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் உடன் சென்றனா்.

குற்ற செயல்களில் ஈடுபடும் நபா்களை எச்சரிக்கும் விதமாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், வரும் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டும் இந்த ரோந்துப் பணி நடைபெற்ாக தெரிவிக்கப்பட்டது.