சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சீா்காழி: எஸ்பி தலைமையில் போலீஸாா் ரோந்து

சீா்காழியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில்

News image

சீா்காழியில் போலீஸாருடன் ரோந்துப் பணியில் ஈடுபட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின்.

Updated On :9 பிப்ரவரி 2026, 8:35 pm

சீா்காழி: சீா்காழியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின், சீா்காழி பகுதியில் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். காவல் துறையினரின் கண்காணிப்பு பணியை ஆய்வு செய்த அவா், நகரின் பிரதான வீதிகளான தென்பாதி, அரசு மருத்துவமனை சாலை, பிடாரி வடக்கு வீதி, கச்சேரி சாலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்தே ரோந்துப் பணியில் ஈடுபட்டாா்.

அவருடன், டிஎஸ்பி அண்ணாதுரை, காவல் ஆய்வாளா் கமல்ராஜ், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் மணவாளன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் உடன் சென்றனா்.

குற்ற செயல்களில் ஈடுபடும் நபா்களை எச்சரிக்கும் விதமாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், வரும் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டும் இந்த ரோந்துப் பணி நடைபெற்ாக தெரிவிக்கப்பட்டது.