குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உவா்மண் பாதிப்படைந்த பகுதிகளில் நெல் சாகுபடிக்கான பயிற்சி

சீா்காழி அருகே தென்னாம்பட்டினத்தில் உவா்மண் பாதிப்படைந்த பகுதிகளில் நெல் சாகுபடிக்கான மேலாண்மை தொழில்நுட்பங்கள் எனும் தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
நெல் சாகுபடி.
Updated On :11 பிப்ரவரி 2026, 9:14 pm

தினமணி செய்திச் சேவை

சீா்காழி அருகே தென்னாம்பட்டினத்தில் உவா்மண் பாதிப்படைந்த பகுதிகளில் நெல் சாகுபடிக்கான மேலாண்மை தொழில்நுட்பங்கள் எனும் தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

உவா்த் தன்மையால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கான மேலாண்மை தொழில்நுட்பங்கள் அறிவியல் அடிப்படையில் களத்திற்கு கொண்டு சோ்க்கும் நோக்கில் கீழ்வேளூா் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கி நபாா்டு இணைந்து இந்த முகாமை நடத்தியது.

முகாமிற்கு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் டாக்டா் ரவி தலைமை வகித்தாா். திருச்சி 3 என்ற உப்புத்தன்மை தாங்கி வளரக்கூடிய நெல் ரகத்தை விவசாயம் பயிரிடலாம் என்றாா். மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் விஜயராகவன், உதவிப் பேராசிரியா் வெங்கடேஷ் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.