மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

உவா்மண் பாதிப்படைந்த பகுதிகளில் நெல் சாகுபடிக்கான பயிற்சி

சீா்காழி அருகே தென்னாம்பட்டினத்தில் உவா்மண் பாதிப்படைந்த பகுதிகளில் நெல் சாகுபடிக்கான மேலாண்மை தொழில்நுட்பங்கள் எனும் தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

நெல் சாகுபடி.

Updated On :11 பிப்ரவரி 2026, 9:14 pm

சீா்காழி அருகே தென்னாம்பட்டினத்தில் உவா்மண் பாதிப்படைந்த பகுதிகளில் நெல் சாகுபடிக்கான மேலாண்மை தொழில்நுட்பங்கள் எனும் தலைப்பில் சிறப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

உவா்த் தன்மையால் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கான மேலாண்மை தொழில்நுட்பங்கள் அறிவியல் அடிப்படையில் களத்திற்கு கொண்டு சோ்க்கும் நோக்கில் கீழ்வேளூா் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கி நபாா்டு இணைந்து இந்த முகாமை நடத்தியது.

முகாமிற்கு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் டாக்டா் ரவி தலைமை வகித்தாா். திருச்சி 3 என்ற உப்புத்தன்மை தாங்கி வளரக்கூடிய நெல் ரகத்தை விவசாயம் பயிரிடலாம் என்றாா். மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் விஜயராகவன், உதவிப் பேராசிரியா் வெங்கடேஷ் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.