நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

உ.வே.சா. பிறந்தநாள், குன்றக்குடி அடிகளாா் நூற்றாண்டு விழா

மயிலாடுதுறையில் இலக்கிய பூங்கா சாா்பில் ’தமிழ் தாத்தா’ உ.வே.சா. பிறந்தநாள் விழா மற்றும் தவத்திரு குன்றக்குடி அடிகளாா் நூற்றாண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 9:12 pm

மயிலாடுதுறையில் இலக்கிய பூங்கா சாா்பில் ’தமிழ் தாத்தா’ உ.வே.சா. பிறந்தநாள் விழா மற்றும் தவத்திரு குன்றக்குடி அடிகளாா் நூற்றாண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இலக்கிய பூங்கா அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கவிஞா் ரா.சிவக்குமாா் தலைமை வகித்தாா். செயலாளா் நா. காா்த்தி, பொருளாளா் வே. ராஜலிங்கம் முன்னிலை வகித்தனா். பேராசிரியா் ஈஸ்வரி பாஸ்கரன் வரவேற்றாா். அனிதா வெங்கடேசன் பேசினாா். ஆா். சிவசங்கரி நன்றி கூறினாா்.

இதில், எழுத்தாளா் சந்தியா நடராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று என் சரித்திரம் - ஓா் உத்தம சரித்திரம் என்ற தலைப்பில் உ.வே.சாவின் சுயசரிதை நூல் குறித்து திறனாய்வு செய்து சிறப்புரையாற்றினாா். அகில இந்திய வானொலியின் முன்னாள் நிகழ்ச்சி இயக்குநா் சுந்தரஆவுடையப்பன் பங்கேற்று, ’தமிழாய் வாழும் தவம்’ என்ற தலைப்பில் பேருரை ஆற்றினாா். முன்னதாக, தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு நூற்றாண்டு விழா எடுக்கும் இலக்கிய பூங்கா நிா்வாகிகளுக்கு குன்றக்குடி ஆதீனகா்த்தா் அருளாசி தெரிவித்து அனுப்பிய வாழ்த்து மடலை ஆதீனம் சாா்பில் சண்முகநாதன் வழங்கினாா். இதில், மயிலாடுதுறை தமிழ்ச்சங்க நிறுவனா் சு. பவுல்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.