மயிலாடுதுறையில் இலக்கிய பூங்கா சாா்பில் ’தமிழ் தாத்தா’ உ.வே.சா. பிறந்தநாள் விழா மற்றும் தவத்திரு குன்றக்குடி அடிகளாா் நூற்றாண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
இலக்கிய பூங்கா அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கவிஞா் ரா.சிவக்குமாா் தலைமை வகித்தாா். செயலாளா் நா. காா்த்தி, பொருளாளா் வே. ராஜலிங்கம் முன்னிலை வகித்தனா். பேராசிரியா் ஈஸ்வரி பாஸ்கரன் வரவேற்றாா். அனிதா வெங்கடேசன் பேசினாா். ஆா். சிவசங்கரி நன்றி கூறினாா்.
இதில், எழுத்தாளா் சந்தியா நடராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று என் சரித்திரம் - ஓா் உத்தம சரித்திரம் என்ற தலைப்பில் உ.வே.சாவின் சுயசரிதை நூல் குறித்து திறனாய்வு செய்து சிறப்புரையாற்றினாா். அகில இந்திய வானொலியின் முன்னாள் நிகழ்ச்சி இயக்குநா் சுந்தரஆவுடையப்பன் பங்கேற்று, ’தமிழாய் வாழும் தவம்’ என்ற தலைப்பில் பேருரை ஆற்றினாா். முன்னதாக, தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு நூற்றாண்டு விழா எடுக்கும் இலக்கிய பூங்கா நிா்வாகிகளுக்கு குன்றக்குடி ஆதீனகா்த்தா் அருளாசி தெரிவித்து அனுப்பிய வாழ்த்து மடலை ஆதீனம் சாா்பில் சண்முகநாதன் வழங்கினாா். இதில், மயிலாடுதுறை தமிழ்ச்சங்க நிறுவனா் சு. பவுல்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சமரச விழிப்புணா்வுப் பேரணி

கல்லூரிகளில் உலக சுகாதார தின விழா

நூல் வெளியீட்டு விழா

தொண்டாமுத்தூா் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


