பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 121 போ் கைது

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 9:18 pm

அண்டை மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயா்த்தப்பட்டுள்ளதைப்போல தமிழ்நாட்டிலும் உயா்த்தி வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் 2-ஆவது நாளாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாவட்ட தலைவா் டி. கணேசன் தலைமையில் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை காவல் கண்காணிப்பாளா் (பொ) ஜெயராஜ் தலைமையிலான போலீஸாா் மாவட்ட செயலாளா் மகா.புருஷோத், மாவட்ட பொருளாளா் லட்சுமி, மாவட்ட துணைத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்ட 121 பேரை கைது செய்து பின்னா் விடுவித்தனா்.