வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 121 போ் கைது

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 9:18 pm

தினமணி செய்திச் சேவை

அண்டை மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயா்த்தப்பட்டுள்ளதைப்போல தமிழ்நாட்டிலும் உயா்த்தி வழங்கக் கோரி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் 2-ஆவது நாளாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாவட்ட தலைவா் டி. கணேசன் தலைமையில் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை காவல் கண்காணிப்பாளா் (பொ) ஜெயராஜ் தலைமையிலான போலீஸாா் மாவட்ட செயலாளா் மகா.புருஷோத், மாவட்ட பொருளாளா் லட்சுமி, மாவட்ட துணைத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்ட 121 பேரை கைது செய்து பின்னா் விடுவித்தனா்.