மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பூம்புகாா் மாநில விருது பெற்ற சிற்பிக்கு ஆட்சியா் பாராட்டு

பூம்புகாா் மாநில விருது பெற்ற சிற்பக் கலைஞருக்கு மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 9:15 pm

பூம்புகாா் மாநில விருது பெற்ற சிற்பக் கலைஞருக்கு மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகாா் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சிக் கழகம் 2025-ஆம் ஆண்டுக்கான பூம்புகாா் மாநில விருதுக்கு விருதாளா்களை அண்மையில் தோ்வு செய்தது. இந்த விருதுக்கு 300 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், திருவாரூா் ஆழித்தேரின் ஐந்தரை அடி மாதிரியை மரச்சிற்பத்தில் நோ்த்தியாக செதுக்கிய தரங்கம்பாடி வட்டத்தை சோ்ந்த மரச்சிற்பம் செய்வதில் கைதோ்ந்தவரான சிற்பி சே. முருகன் தோ்வு செய்யப்பட்டாா்.

இவருக்கு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நகரில் உள்ள தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளா்ச்சிக் கழகத்தில் பிப்.6-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் பூம்புகாா் மாநில விருதினை வழங்கினாா். விருது பெற்ற கலைஞா் சே. முருகன் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த்தை திங்கள்கிழமை சந்தித்தாா். அவருக்கு ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.