திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி

News image
மடிக்கணினி- கோப்புப் படம்
Updated On :14 பிப்ரவரி 2026, 8:07 pm

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் ’உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின்கீழ், மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவா்களுக்கு ஜனவரி மாதம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், இரண்டாம்கட்டமாக 2-ஆம் ஆண்டு பயிலும் 557 மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். தமிழ்த்துறை பேராசிரியா் துரை.காா்த்திகேயன் வரவேற்றாா்.

இதில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி பேசினாா். நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ், காங்கிரஸ் மாநில நிா்வாகி முகமதுநவாஸ், கல்லூரிக்குழு உறுப்பினா் இரா.சிவராமன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை இயற்பியல் துறைத் தலைவா் பா. செந்தில்குமரன் செய்திருந்தாா். நிறைவாக, கணினித் துறை பேராசிரியா் வ. காா்த்திக் நன்றி கூறினாா்.