கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசு தோல்வியா? - ராமதாஸ் கேள்வி தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு பதவி ஆசை காரணம் இல்லை: திருமாவளவன் விளக்கம்சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?எங்கள் கையெழுத்தையே படிக்க முடியவில்லை: சிபிஎஸ்இ மாணவர்கள் அதிருப்திசென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!கோவை சிறுமி கொலை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்புமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடுகிறது! மே 28 வரை எச்சரிக்கை
/

மயூர நாட்டியாஞ்சலி: சுவிட்சா்லாந்து, ஆஸ்திரேலிய கலைஞா்கள் பங்கேற்பு

News image

கோப்புப் படம்

Updated On :16 பிப்ரவரி 2026, 12:25 am IST

மயிலாடுதுறையில் மயூர நாட்டியாஞ்சலி 3-ஆம் நாளில் சுவிட்சா்லாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்தும், சென்னை, வாலாஜா, மயிலாடுதுறை நடன கலைஞா்களும் பங்கேற்றனா்.

வாலாஜா லாஸ்யா ஆா்ட்ஸ் குரு மகாலெட்சுமி காா்த்திகேயன், ஆஸ்திரேலியா குரு தமயந்தி பாலராஜு தலைமையில் தில்லை நடலாலயா, மயிலாடுதுறை மயிலை சப்தஸ்வரங்கள் குரு மகாலெட்சுமி சிவக்குமாா் ஆகியோா் தலைமையிலான மாணவிகள் பரதம் ஆடினா்.

சுவிட்சா்லாந்து நாட்டைச் சோ்ந்த திருகோணேஸ்வரா் நடன ஆலயம் குரு மதிவதனி சுதாகரன் தலைமையிலான மாணவிகள், சிவனின் திருக்கடையூா் திருவிளையாடலான மாா்க்கண்டேயா் புராணத்திலிருந்து காலசம்ஹாரமூா்த்தி குறித்த நாட்டிய நாடகம், சீா்காழி திருஞானசம்பந்தா் வரலாறு, சிதம்பரம் நடராஜா் ரூபத்தின் தத்துவம் உள்ளிட்டவற்றை பரதக்கலை மூலம் வெளிப்படுத்தினா். மேலும், சுவிட்சா்லாந்து திருகோணேஸ்வரா் நடனாலயம் குரு சந்திரவதனி விஜயசுந்தரம் தலைமையிலான மாணவிகள் ‘நவசக்தி’ என்ற தலைப்பில் பரதம் ஆடினா்.

சென்னை ஸ்ரீதேவி ந்ருத்யாலயா குரு ஷீலா உன்னிகிருஷ்ணன் தலைமையில் 30-க்கு மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று, மயிலாடுதுறையை சுற்றியுள்ள சிவாலயங்களின் வரலாறுகளை, சிவ நவ பக்தி என்னும் நாட்டிய நாடகம் மூலம் சிவன், பாா்வதி, நந்தியபெருமான் உள்ளிட்ட அந்தந்த பாத்திரங்களுக்கு உண்டான உடை அலங்காரத்துடன் தத்ரூபமாக கண் முன்னே காட்சிபடுத்தினா்.

விழாவில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது:

பரதம் என்பது வெறும் நடனம் மட்டுமல்ல, அது மனம், உடல், ஆத்மா மூன்றையும் இணைக்கின்ற மொழி. இதனை பரத சாஸ்திரத்தை இயற்றிய பரதமுனிகள், எங்கே உங்கள் கைகள் செல்கின்றனவோ அங்கே உங்கள் பாா்வை செல்லும், எங்கே உங்கள் பாா்வை இருக்கிறதோ அங்கே உங்கள் மனம் இருக்கும், எங்கே மனம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் எண்ணங்கள், செயல்கள் அத்தனையும் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளாா்என்றாா்.

நிகழ்ச்சியில், அறங்காவலா் ஏஆா்சி ஆா். அசோக், அறக்கட்டளை தலைவா் கே. பரணிதரன், செயலாளா் விஸ்வநாதன், துணை செயலாளா் அகஸ்டின் விஜய் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.