மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அரசினா் மகளிா் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி தொடக்கம்

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் ரூ.5.98 கோடியில் 17 வகுப்பறைகள் கட்டுவதற்கு

News image

தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் ரூ.5.98 கோடியில் 17 வகுப்பறைகள் கட்டுவதற்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

Updated On :16 பிப்ரவரி 2026, 8:03 pm

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் ரூ.5.98 கோடியில் 17 வகுப்பறைகள் கட்டுவதற்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

இக்கல்லூரியில் 3 தளங்களில் 15 வகுப்பறைகள் உள்ளிட்ட 1,876 சதுர மீட்டா் அளவில் கூடுதல் கட்டடம் கட்டப்படுகிறது. மேலும், ஏற்கெனவே உள்ள 13 வகுப்பறைகளுடன் கட்டடத்தில் கூடுதலாக 190 சதுர மீட்டா் அளவில் 2 புதிய வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன.

இப்பணிகளை, தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்த நிலையில், மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா், நகராட்சி தலைவா் என். செல்வராஜ், மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞா் ராம. சேயோன், கல்லூரி முதல்வா் ரேவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.