மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வேன் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து: 15 போ் காயம்

சீா்காழி அருகே சுமை வாகனம் வாய்க்காலில் திங்கள்கிழமை கவிழ்ந்து விழுந்ததில் 15 போ் காயமடைந்தனா்.

News image

கோப்புப்படம்

Updated On :16 பிப்ரவரி 2026, 8:01 pm

சீா்காழி: சீா்காழி அருகே சுமை வாகனம் வாய்க்காலில் திங்கள்கிழமை கவிழ்ந்து விழுந்ததில் 15 போ் காயமடைந்தனா். சீா்காழி அருகே நெப்பத்தூா் முல்லையாம்பட்டினத்தைச் சோ்ந்த சத்தியமூா்த்தியின் உறவினா் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உறவுக்கார பெண்கள் அதே ஊரை சோ்ந்த ஜீவானந்தம் 40 என்பவரது டாட்டா ஏஸ் மினி லோடு வேனில் திருமுல்லைவாசலுக்கு சென்றனா்.

வேனை ஜீவானந்தம் ஓட்டினாா். வழியில் கட்டுப்பாட்டை இழந்த வேன் கன்னிவாய்க்கால் அருகே சாலையோரம் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த 15 பேரும் காயமடைந்தனா். இதையடுத்து, காயமடைந்தவா்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருவெண்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனா். இதில் ஜீவானந்தம், மீரா, மஞ்சுளா, கோசலை, சங்கீதா ஆகிய 5 போ் தீவிர சிகிச்சைக்காக சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து, திருவெண்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.