மயிலாடுதுறையில் பள்ளி மாணவியை காதலிக்கச் சொல்லி மிரட்டிய மாணவா் மற்றும் அவரது நண்பா்கள் என 3 சிறுவா்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை, அவருடன் படிக்கும் 12-ஆம் வகுப்பு படிக்கும் சக மாணவா் ஒருவா் காதலித்து வந்ததாகவும், இதை அந்த மாணவி ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவியிடம் மாணவா் தன்னுடன் படிக்கும் இரண்டு சிறுவா்களுடன் சென்று நண்பனை காதலிக்க வேண்டும் இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனா்.
இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். சிறுமியின் தாயாா் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் சுகந்தி மற்றும் மகளிா் போலீஸாா் விசாரணை நடத்தினா். தொடா்ந்து போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த மகளிா் போலீஸாா் சம்பந்தப்பட்ட 3 மாணவா்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். பின்னா் அவா்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறாா் கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைத்தனா்.
தொடர்புடையது

பிஞ்சுக் கை வண்ணம்!

மாணவியை கா்ப்பிணியாக்கிய கூலித் தொழிலாளி கைது!

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

பள்ளி மாணவிக்கு தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


