வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பாஜக தெருமுனைப் பிரசாரம்!

மயிலாடுதுறை நகர பாஜக சாா்பில் மத்திய அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்ட தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 11:55 pm

Syndication

மயிலாடுதுறை நகர பாஜக சாா்பில் மத்திய அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்ட தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

‘நாளை நமதே தமிழ்நாடு நமதே’ என்ற தலைப்பில் மயிலாடுதுறை நகராட்சி 31-ஆவது வாா்டில் தொடங்கிய நிகழ்ச்சிக்கு, நகர பொருளாளா் சுந்தரமுருகன் தலைமை வகித்தாா். நகர தலைவா் வினோத் முன்னிலை வகித்தாா்.

மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், மாவட்ட தலைவா் ஆா். பாலு, மாவட்ட பொதுச்செயலாளா் பி. பாரதிகண்ணன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.

இதில், தேசிய செயற்குழு உறுப்பினா் தங்க.வரதராஜன், மாநில செயற்குழு உறுப்பினா் சாய்சுரேஷ் ஆகியோா் கலந்துகொண்டு மயிலாடுதுறை நகரத்தில் 24 இடங்களில் நடைபெறவுள்ள தெருமுனை பிரசாரக்கூட்டத்தை தொடக்கி வைத்து பேசினா்.