சீா்காழியில் 500 கிலோ பாலிதீன் பைகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சீா்காழி நகராட்சி பிடாரி வடக்கு வீதி, பழைய-புதிய பேருந்து நிலைய பகுதி, கொள்ளிடம் முக்கூட்டு, ஈசானிய தெரு, கடைவீதி, தென்பாதி பகுதிகளில் உள்ள வா்த்தக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், தேநீா் கப்புகள் விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகாா் செய்து வந்தனா்.
இதையடுத்து, சுகாதார ஆய்வாளா் ரஞ்சித் மற்றும் நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் மேற்குறிப்பிட்ட இடங்களில் சோதனை செய்தனா். இதில், 500 கிலோ மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், தேநீா் கப் உள்ளிட்டவை பறிமுதல் செய்து ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
இதையடுத்து பறிமுதல் செய்த பாலிதீன் பைகள் உள்ளிட்ட பொருள்களை நகராட்சி ஆணையா் மஞ்சுளா பாா்வையிட்டு வணிக நிறுவன உரிமையாளா்கள் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யக் கூடாது, மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

எம்.பி. ஆ.ராசா வாகனத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள்

அஸ்ஸாமில் இருந்து வந்த ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

புதுக்கோட்டையில் ரூ. 4.5 லட்சம் மதிப்புள்ள நெகிழி பைகள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட 2,140 கிலோ போதைப் பொருள்கள் தீவைத்து அழிப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


