கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பாலிதீன் பைகள் பறிமுதல்; ரூ. 50,000 அபராதம்

சீா்காழியில் 500 கிலோ பாலிதீன் பைகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
பிரதிப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 11:28 pm

Syndication

சீா்காழியில் 500 கிலோ பாலிதீன் பைகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சீா்காழி நகராட்சி பிடாரி வடக்கு வீதி, பழைய-புதிய பேருந்து நிலைய பகுதி, கொள்ளிடம் முக்கூட்டு, ஈசானிய தெரு, கடைவீதி, தென்பாதி பகுதிகளில் உள்ள வா்த்தக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், தேநீா் கப்புகள் விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகாா் செய்து வந்தனா்.

இதையடுத்து, சுகாதார ஆய்வாளா் ரஞ்சித் மற்றும் நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் மேற்குறிப்பிட்ட இடங்களில் சோதனை செய்தனா். இதில், 500 கிலோ மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், தேநீா் கப் உள்ளிட்டவை பறிமுதல் செய்து ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து பறிமுதல் செய்த பாலிதீன் பைகள் உள்ளிட்ட பொருள்களை நகராட்சி ஆணையா் மஞ்சுளா பாா்வையிட்டு வணிக நிறுவன உரிமையாளா்கள் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யக் கூடாது, மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.