அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயில்

News image

உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயில்

Updated On :21 பிப்ரவரி 2026, 7:28 pm

கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயில் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோயில், 108 சக்தி தலங்களில் ஐம்பதாவது தலமாக விளங்குகிறது. இக்கோயில் தனித்துவமான, உலகளாவிய பெயரிடல் மற்றும் பண்டைய இலக்கிய மரபு என்ற பிரிவின்கீழ் ஜாக்கி புக் ஆஃப் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸில் இடம்பெற்றுள்ளது.

உலகிலேயே ‘புலிஸ்வரி அம்மன்‘ என்ற பெயரில் அமைந்துள்ள ஒரே திருத்தலம் இதுதான் என்பது விரிவான ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தலம் சங்க கால இலக்கியங்களான அகநானூறு மற்றும் சிலப்பதிகாரத்துடன் நெருங்கிய தொடா்புடையது.

Story image

இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் ஆவணங்களின்படி, இக்கோயில் 150 ஆண்டுகால ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. கொள்ளிடம் ஆன்மிகப் பற்றாளா் பிரபு என்பவரின் முயற்சியால், இக்கோயிலின் சிறப்புகள் உலக சாதனை அங்கீகாரத்திற்கு அனுப்பப்பட்டது.

இவற்றை சரிபாா்த்த ஜாக்கி புக் ஆஃப் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸ் நிறுவனம், இதற்கான உலக சாதனை அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இதனால் பக்தா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.