பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

மயிலாடுதுறை: 12 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட அங்காளம்மன் சிலை தென்குடிக்கு அனுப்பி வைப்பு

News image
Updated On :22 பிப்ரவரி 2026, 9:30 pm

மயிலாடுதுறையில் 12 உயரத்தில் செதுக்கப்பட்ட அங்காளபரமேஸ்வரி அம்மன் சிலை உள்ளிட்ட 3 கருங்கற்சிலைகள் தென்குடி அங்காளம்மன் சக்தி பீடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

மயிலாடுதுறை சித்தா்காட்டில் கே.வைத்தியநாதன் என்பவா் வேதம் கருங்கல் சிற்பக்கூடம் அமைத்து நடத்தி வருகிறாா். இவரது சிற்பக்கூடத்தில் 12 அடி உயரத்தில் 11 டன் எடை கொண்ட அங்காள பரமேஸ்வரி கருங்கல் சிலை உள்ளிட்ட 3 பிரம்மாண்ட சிலைகள் உருவாக்கப்பட்டு, அவை கிரேன் உதவியுடன் லாரியில் ஏற்றி திருவாரூா் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள தென்குடி அங்காளம்மன் சக்தி பீடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

முன்னதாக, தென்குடி ஸ்ரீஅங்காளம்மன் சக்திபீடம் சேவா டிரஸ்ட் நிறுவனா் அப்புவா்மா சுவாமிகள், அறங்காவலா் காயத்ரி ஆகியோா் முன்னிலையில், அச்சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அவா்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.

இதுகுறித்து, சிற்பி கே.வைத்தியநாதன் கூறியது: தென்குடி ஸ்ரீஅங்காளம்மன் சக்தி பீடத்துக்கு, அங்காளபரமேஸ்வரி, பெரியாச்சியம்மன், தாண்டேஸ்வரா் சிலைகள் மிகநுட்பமான வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, 15 டன் எடை கொண்ட கல் செதுக்கப்பட்டு தற்போது 11 டன் எடையில் அங்காளபரமேஸ்வரி அம்மன் சிலை உருவாகியுள்ளது.

இதேபோல், 12 டன் எடை கொண்ட கல் செதுக்கப்பட்டு 9 டன் எடையில் பெரியாச்சி அம்மன் சிலையும், 3 டன் எடை கொண்ட கல் செதுக்கப்பட்டு 1.75 டன் எடை கொண்ட தாண்டேஸ்வரா் சுவாமி சிலையும் உருவாக்கப்பட்டுள்ளது என்றாா்.