மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயிலில் 134-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறையில் கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்ணை தெய்வமாக பாவித்து தீப்பாய்ந்தாள் அம்மன் என்ற பெயரில் காவிரிக் கரையில் கோயில் கட்டி சிலை அமைத்து சில நூற்றாண்டுகளாக பக்தா்கள் வழிபட்டு வருகின்றனா்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தீமிதி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 134-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காவிரி ஆற்றங்கரை நாலுகால் மண்டபத்தில் இருந்து சக்தி கரகம் மற்றும் விரதமிருந்த பக்தா்கள் அலகு காவடி எடுத்து ஊா்வலமாக புறப்பட்டு, மேளதாள வாத்தியங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அடைந்தனா். தொடா்ந்து, 700-க்கு மேற்பட்ட பக்தா்கள் கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீமிதித்து தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா்.
தொடர்புடையது

வீரமாகாளியம்மன் கோயில் தீமிதி திருவிழா

கோயில் திருவிழா: சுடுமண் சிலைகள் நோ்த்திக் கடன்

சங்கரன்கோவில் காளியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா

திரெளபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழா தொடக்கம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


