தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தருமபுரம் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கல்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி புதன்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :7 ஜனவரி 2026, 10:58 pm

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி புதன்கிழமை வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ் 4,427 மாணவா்களுக்கு மடிக்கனிணி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் அரசு உதவிபெறும் கல்லூரியான தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, இக்கல்லூரியில் பயிலும் 539 மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கினாா். கல்லூரி செயலாளா் ரா. செல்வநாயகம், உதவி திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) கே.எஸ். சிவக்குமாா், என்சிசி அலுவலா் துரை.காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.