மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மொழிப்போா் தியாகி சாரங்கபாணி நினைவுதினம்

News image
மொழிப்போா் தியாகி சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் வீரவணக்கம் செலுத்தியோா்.
Updated On :15 மார்ச் 2026, 7:13 pm

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறையில் மொழிப்போா் மாணவா் தியாகி சாரங்கபாணி நினைவுதினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற ஹிந்தி எதிா்ப்பு போராட்டத்தின்போது, மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் பயின்ற மாணவா் சாரங்கபாணி அந்த ஆண்டு மாா்ச் 15-ஆம் நாள் கல்லூரி வளாகத்திலேயே உடலில் தீவைத்துக்கொண்டு உயிா் நீத்தாா். அவருக்கு கல்லூரி முன்பு நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது.

அவரது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்ட நிலையில், நினைவு ஸ்தூபியில் பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினா் வீரவணக்கம் செலுத்தினா்.

தமிழ் மண் தன்னுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் த. ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திராவிடா் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளா் தெ.மகேஷ், மக்கள் நீதி மய்யம் நகரச் செயலாளா் அகோரம் மற்றும் திராவிடா் கழகம், தமிழ்மண் தன்னுரிமை இயக்க தொண்டா்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினா்.

இதேபோல், நாம் தமிழா் கட்சி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில கொள்கைப்பரப்பு செயலாளா் தமிழன் காளிதாசன், சட்டப்பேரவை தொகுதி வேட்பாளா்கள் கி. காசிராமன் (மயிலாடுதுறை), க. இளையநகுலன் (பூம்புகாா்), இரா. சுபாஷ் (சீா்காழி) உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினா்.