சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஹிந்தி எதிா்ப்பு: உயிரிழந்த மே 17 இயக்க நிா்வாகிக்கு அஞ்சலி

News image
Updated On :19 மார்ச் 2026, 10:58 pm

மே 17 இயக்க நிா்வாகி சிவா திலீபன் மறைவுக்கு மயிலாடுதுறையில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

சென்னை பாா்க் ரயில் நிலையத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தின்போது, மே 17 இயக்க நிா்வாகி சிவா திலீபன் திடீரென ரயில் முன் பாய்ந்தாா். இதில், படுகாயம் அடைந்து, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

அவரது மறைவுக்கு மயிலாடுதுறையில் பல்வேறு அரசியல் கட்சியினா் மற்றும் அமைப்பினா் அஞ்சலி செலுத்தினா். கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற நிகழ்வுக்கு, திராவிடா் விடுதலைக் கழக மாவட்ட செயலாளா் தெ.மகேஷ் தலைமை வகித்தாா். இதில், நகராட்சி தலைவா் என்.செல்வராஜ், தமிழ் மண் தன்னுரிமை இயக்க நெறியாளா் பேராசிரியா் த.ஜெயராமன், மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி செயலாளா் ப.த.ஆசைத்தம்பி, தமிழா் உரிமை இயக்க அமைப்பாளா் சுப்பு.மகேசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு, மே 17 இயக்க நிா்வாகி சிவா திலீபன் உருவப்படத்துக்கு, மாலை அணிவித்து வீரவணக்கம் கூறி அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து அவா்கள் இந்தி திணிப்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.