தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கக் கட்டடத்தில் விரிசல்: புதிய கட்டடம் கட்ட மனிதநேய ஜனநாயகக் கட்சி கோரிக்கை

நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கக் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

Updated On :9 ஜூலை 2018, 1:52 am

நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கக் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 
செம்பனார்கோவில் ஒன்றியம், ஆக்கூர் பாரதி வீதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கடந்த 14.2.1964-இல் அப்போதைய முதல்வர் பக்தவத்சலத்தால் திறந்து வைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் ஆக்கூர், அன்னப்பன்பேட்டை, மடப்புரம், கிடங்கல், பூந்தாழை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். 
இந்நிலையில், இந்த கூட்டுறவு கடன் சங்கக் கட்டடத்தில் தற்போது விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் காரைகள் பெயர்ந்து வலுவிழந்து காணப்படுகிறது. அத்துடன் மழைக்காலங்களில் ஜன்னல் விரிசல்கள் வழியாக மழைநீர் கசிந்து மின்கசிவு ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால், பல்வேறு சான்றுகளைப் பதிவு செய்ய வரும் பொதுமக்கள் ஒருவித அச்ச உணர்வுடனேயே 
வருகின்றனர்.
ஆகையால், வலுவிழந்த இந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கக் கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டுமென மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஷாஜகான் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.