தொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

வனமகோத்ஸவ வார விழா நிறைவு

நாகை மாவட்டம், சீர்காழி சட்டநாதபுரத்தில் உள்ள சுபம் வித்யாமந்திர் பப்ளிக் பள்ளியில் வனமகோத்ஸவ வார விழா அண்மையில் நிறைவடைந்தது.

Updated On :9 ஜூலை 2018, 1:55 am

நாகை மாவட்டம், சீர்காழி சட்டநாதபுரத்தில் உள்ள சுபம் வித்யாமந்திர் பப்ளிக் பள்ளியில் வனமகோத்ஸவ வார விழா அண்மையில் நிறைவடைந்தது.
இப்பள்ளியில் வனமகோத்ஸவ விழா கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. நிகழ்ச்சியை சுபம் லிட்டில் ஏஞ்சல் பள்ளி தாளாளர் ஹர்ஷாசுதேஷ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். முதல் நாள் நிகழ்ச்சியில் பள்ளியின் பசுமைக்குழு சார்பில், வனப் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. 2-ஆம் நாள் பசுமைப்புரட்சி குறித்து ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. 3-ஆம் நாள் வனங்களின் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவியரின் மாறுவேட போட்டிகள் நடைபெற்றன. 4-ஆம் நாள் வினா- விடை போட்டிகளும், 5-ஆம் நாள் சுற்றுச்சூழல் மேம்பாட்டின் அவசியம் குறித்து கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 6-ஆம் நாள் நிறைவில் சீர்காழி ச.மு.இ. மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் முரளிதரன் தலைமையில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் சுதேஷ்ஜெயின் முன்னிலை வகித்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்குப் பரிசுகளை வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.