சீர்காழி சட்டநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு

நிகழாண்டின் முதல் பிரதோஷத்தையொட்டி, சீர்காழி சட்டநாதர் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Updated on
1 min read

நிகழாண்டின் முதல் பிரதோஷத்தையொட்டி, சீர்காழி சட்டநாதர் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயிலில், திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீசுவரர் சுவாமி அருள்பாலிக்கிறார். பிரதோஷத்தையொட்டி, மூலவர் சுவாமி- அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர், வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர்- நாயகி பிராகார உலா நடைபெற்றது. இதேபோல், நாகேசுவரமுடையார் கோயில், வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயில் ஆகிய கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com