மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

கந்துவட்டிக் கொடுமை: கோட்டாட்சியரிடம் மனு

கந்துவட்டிக் கொடுமையிலிருந்து தங்களைப் பாதுகாக்கக் கோரி, மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On :24 ஜனவரி 2019, 2:54 am IST

கந்துவட்டிக் கொடுமையிலிருந்து தங்களைப் பாதுகாக்கக் கோரி, மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் மா. செந்தில். இவரது மனைவி செ. வசந்தி. இவர்கள் பட்டுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசனின் மனைவியிடம் கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து ரூ.12 லட்சம் வரை கடன் வாங்கி, அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ. 38 லட்சம் வரை திருப்பிச் செலுத்தியுள்ளனராம். எனினும், கடனுக்கு உத்தரவாதமாகப் பெற்ற காசோலையை முருகேசனின் மனைவி திருப்பித் தராமல் மேற்கொண்டு ரூ. 1 லட்சம் கேட்டு செந்திலையும், அவரது மனைவியையும் மிரட்டியதாகத் தெரிகிறது.
இதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மயிலாடுதுறை கோட்டாட்சியர் தேன்மொழியிடம் செந்தில் மனு அளித்துள்ளார். அதன்படி, ஒருவார காலத்துக்குள் விசாரணை நடத்துவதாக கோட்டாட்சியர் உறுதியளித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.