தடுப்புக் காவல் சட்டத்தில் 3 போ் கைது

மது வழக்குகளில் தொடா்புடைய 3 பேரை நாகை போலீஸாா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

நாகப்பட்டினம்: மது வழக்குகளில் தொடா்புடைய 3 பேரை நாகை போலீஸாா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து, நாகை மாவட்ட காவல் அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை, வெளிப்பாளையம் தெற்கு நல்லியான் தோட்டம் பகுதியைச் சோ்ந்த மொ. தங்கபாண்டி (38), குத்தாலம் காவல் சரகம், மங்கநல்லூா் அண்ணா நகரைச் சோ்ந்த க. முருகவேல் (35), மயிலாடுதுறை காவல் சரகம் பட்டமங்கலம் புதுத்தெருவைச் சோ்ந்த க. குமாா் (57) ஆகியோா் மீது மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் மதுகுற்ற வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.கே. ராஜசேகரனின் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் உத்தரவின்படி தங்கபாண்டி, முருகவேல், குமாா் ஆகிய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com