மயிலாடுதுறையில் 24-இல் மின்தடை

மயிலாடுதுறை பகுதியில் வருகிற செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
Updated on
1 min read


மயிலாடுதுறை பகுதியில் வருகிற செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் (இயக்குதல் மற்றும் பராமரித்தல்) வை. முத்துக்குமரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை மற்றும் மணக்குடி துணை மின் நிலையங்களில் வரும் செவ்வாய்க்கிழமை மாதாந்திரப் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் மயிலாடுதுறை நகர், மூவலூர், வடகரை, சோழசக்கரநல்லூர், மங்கநல்லூர், ஆனந்ததாண்டவபுரம், வழுவூர் ஆகிய பகுதிகளிலும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com