பொறையாறில் மழலையர் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கி, நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பெட்ஸி எலிசபெத் டிரஸ்ட் நிறுவனர் ஹில்டா ஐசக் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் சீனிவாசன் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் குறித்துப் பேசினார். இதில், குழந்தைகளின் கல்வி மேம்பாடு, வாழ்க்கைக் கல்வி உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டன. பெட்ஸி எலிசபெத் தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.