குத்துவிளக்கு பூஜை
By DIN | Published On : 04th August 2019 01:08 AM | Last Updated : 04th August 2019 01:08 AM | அ+அ அ- |

ஆடி வெள்ளியை முன்னிட்டு, திருமருகல் ஒன்றியம், அனந்தநல்லூரில் அமைந்துள்ள மகாமாரியம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு பூஜை நடத்துவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மேற்கொண்டனர்.