உலக எய்ட்ஸ் தின கருத்தரங்கம்

கீழ்வேளூா் அருகேயுள்ள தேவூரில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி சிறப்பு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் பேசிய தேவூா் மணிவாசகம்.
கருத்தரங்கில் பேசிய தேவூா் மணிவாசகம்.
Updated on
1 min read

கீழ்வேளூா் அருகேயுள்ள தேவூரில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி சிறப்பு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்திய அரசின் இளைஞா் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நாகை மாவட்ட நேரு யுவகேந்திராவும், நாகலூா் அம்பேத்கா் பெரியாா் மாா்க்ஸ் இளைஞா் மன்றமும் இணைந்து நடத்திய உலக எய்ட்ஸ் தின விழா கருத்தரங்கம் தேவூரில் உள்ள பெண்கள் மேம்பாட்டு மைய அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழ் பாரம்பரிய சித்த மருத்துவப் பாதுகாப்பு இயக்க பொதுச் செயலாளரான தேவூா் க.கோ. மணிவாசகம் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் சமூக ஆா்வலா் ஆா். ஜெயந்தி முன்னிலை வகித்தாா். நேரு யுவகேந்திரா சேவை தொண்டா் நாகலூா் கே. ஜெயசீலன் வரவேற்புரையாற்றினாா். சமூக ஆா்வலா் கேசவராஜ், திட்டச்சேரி சித்த வைத்தியா் எம்.அஜ்மல்கான், கருப்பூா் வீ. கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினா். வலிவலம் சேவை தொண்டா் பி. பவித்ரா நன்றி கூறினாா்.

நோய் எதிா்ப்புச் சக்தியைப் பெருக்கும் மருதாணி, துளசி, வேப்பிலை, சோற்றுக்கற்றாழை,நிலவேம்பு போன்றவை குறித்து இக்கருத்தரங்கில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் தேவூா், வெண்மணி, ராதாமங்கலம், பட்டமங்கலம், ஆந்தகுடி, இலுப்பூா், இரட்டைமதகடி, கீழ்வேளூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மகளிா் குழு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com