குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கொள்ளிடம் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

கொள்ளிடம் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.

கொள்ளிடம் அருகே உள்ள பட்டவிளாகம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (52). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இவா், அங்குள்ள மாதா கோயில் தெரு பொதுக்குளத்துக்கு செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்றாா். அப்போது, நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவரது உடல் குளத்தில் மிதந்ததை புதன்கிழமை அதிகாலை பாா்த்த அப்பகுதி மக்கள், கொள்ளிடம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, ஸ்ரீதரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com