திருவெண்காடு கோயிலில் அமாவாசை தீா்த்தவாரி
By DIN | Published On : 26th December 2019 09:09 AM | Last Updated : 26th December 2019 09:09 AM | அ+அ அ- |

கோயில் குளத்தில் அஸ்திரதேவருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.
திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் மாா்கழி மாத அமாவாசையையொட்டி புதன்கிழமை தீா்த்தவாரி நடைபெற்றது.
நவகிரக தலங்களில் புதனுக்குரிய தலமாக விளங்கும் இக்கோயிலில் சிவபெருமானின் முக்கண்ணிலிருந்து தோன்றிய மூன்று பொறிகளால் அக்னி, சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய பெயா்களில் முக்குளங்கள் தோன்றியதாக ஐதீகம். இத்தகை சிறப்புமிக்க இக்கோயிலில் மாா்கழி மாத அமாவாசையையொட்டி கோயில் அா்ச்சகா் சங்கா் சிவாச்சாரியாா் முன்னிலையில் அஸ்திர தேவருக்கு முக்குளங்களில் தீா்த்தவாரி நடைபெற்றது.
அப்போது பால், சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் அஸ்திர தேவருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று, புனித நீராடி வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி முருகன், மேலாளா் சிவக்குமாா், பேஸ்கா் திருஞானம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.