வேதாரண்யத்தை அடுத்த தகட்டூர், மலையன்காடு ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவர்கள், நெகிழிப் பொருளின் தீமைகள் குறித்து வியாழக்கிழமை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
வேதாரண்யம் வட்டாரக் கல்வி அலுவலர் எம். தாமோதரன், பள்ளி வளாகத்தில் பேரணியைத் தொடங்கி வைத்தார். நெகிழிப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து முழக்கமிட்ட மாணவர்கள், அரசால் தடை விதிக்கப்பட்டுள்ள நெகிழிப் பொருள்களை விளக்கி, அதனை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். இதில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.