திருமருகல் அருகேயுள்ள திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு திட்டச்சேரி ஆரம்ப சுகாதார அலுவலர் மணிவேல் தலைமை வகித்தார். இதில், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டு பள்ளியில் உள்ள குடிநீர் குழாய்கள், தண்ணீர் தேங்கியுள்ள இடங்கள், குப்பைகள் உள்ள இடங்களை கண்டறிந்து கொசு மருந்து தெளிக்கப்பட்டன. பின்னர், மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், சுகாதார மேற்பார்வையாளர் பரசுராமன், பள்ளித் தலைமையாசிரியர் கலாராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.