மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு

வேதாரண்யம் அருகே வெள்ளிக்கிழமை தொலைக்காட்சிப் பெட்டியை நகர்த்தியபோது மின்சாரம் பாய்ந்து இளைஞர்உயிரிழந்தார்.
Updated on
1 min read

வேதாரண்யம் அருகே வெள்ளிக்கிழமை தொலைக்காட்சிப் பெட்டியை நகர்த்தியபோது மின்சாரம் பாய்ந்து இளைஞர்
உயிரிழந்தார்.
நாகக்குடையான் கிராமம் ஜெயா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன்(35). இவர், தனது வீட்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியை நகர்த்தியபோது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார். இதையடுத்து, உடனடியாக அவர் மீட்கப்பட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாலமுருகன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, கரியாப்பட்டினம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com