சீர்காழியை அடுத்த திருநாங்கூர் வண்புருஷோத்தமப் பெருமாள் கோயிலில் கருடசேவை உத்ஸவம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருநாங்கூர் வண்புருஷோத்தமப் பெருமாள் கோயிலில் வருடாந்திர உத்ஸவம் நடைபெற்றுவருகிறது. இதன், முக்கிய நிகழ்வாக கருடசேவை செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி, வண்புருஷோத்தமப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாற்றுமுறை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, தங்க கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.