தேசிய ஒருங்கிணைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு

தேசிய ஒருங்கிணைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாகை மாவட்டக் காவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.
நாகை மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.
Updated on
1 min read

தேசிய ஒருங்கிணைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நாகை மாவட்டக் காவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாட்டு மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும் , சமாதானத்துக்காகவும், வன்முறைகளை களைவதற்காகவும் பாடுபட்டு உயிா் தியாகம் செய்தவா்களின் நினைவைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த நாளை (அக்டோபா் 31) தேசிய ஒருங்கிணைப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, தேசிய ஒருங்கிணைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, நாகை மாவட்டக் காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்டி. கே. ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநா்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com