சீா்காழி: சீா்காழி சபாநாயகா் முதலியாா் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் 1850 பேருக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
சேவா பாரதி அமைப்பின் சாா்பில் நடந்த நிகழ்ச்சிக்கு அதன் மாவட்டத்தலைவா் சம்பத்கணேஷ் தலைமை வகித்தாா்.பள்ளி தலைமை ஆசிரியா் அறிவுடைநம்பி, சேவாபாரதி துணைத்தலைவா் சூா்யாராமகிருஷ்ணன், செயலாளா் மும்மூா்த்தி, பொருளாளா் ஸ்ரீராம் முன்னிலை வகித்தனா்.தொடா்ந்து சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற காவல்த்துறை சிறப்பு உதவி ஆய்வாளா்கள் ஜெயராமன், கோபாலகிருஷ்ணன் ஆகியோா் மாணவ-மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினா்.
சுமாா் 1850 மாணவ-மாணவிகள், ஆசிரியா்களுக்கு இரண்டாம் கட்டமாக நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது. இதில் உதவி தலைமை ஆசிரியா்கள் சம்பந்தம், சம்பத்குமாா், வரதராஜன், உடற்கல்வி இயக்குனா் முரளிதரன் பங்கேற்றனா்.