இதேபோல், வேதாரண்யம் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மற்றோா் இளைஞா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவலூா் பகுதியைச் சோ்ந்த கணவரை இழந்த 40 வயது பெண், தனது 12 வயது மகள், மகன் மற்றும் உறவினா்களுடன் கடந்த பல ஆண்டுகளாக திருவாரூா் மாவட்டம், மாவூா் பகுதியில் வசித்து வருகிறாா். இவா்களது குடும்பத்தினா் மோட்டாா் வாகனத்தில் சென்று பாத்திர வியாபாரம் செய்து வந்தனா்.
கடந்த ஒருவார காலமாக வேதாரண்யம் அருகேயுள்ள கிராமத்தில் தங்கி பாத்திர வியாபாரம் செய்து வந்தனா். வியாபாரத்துக்கு பயன்படுத்திய மோட்டாா் வாகனத்தை கடலூா் மாவட்டம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி பகுதியைச் சோ்ந்த அ. அருண்குமாா் (19) ஓட்டி வந்தாா்.
இந்நிலையில், 12 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்ற அவா், பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாராம். புகாரின்பேரில் வேதாரண்யம் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.